Thursday, September 15, 2005

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன.

அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார்.

இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை யாரும் விமர்சனம் செய்துவிடக்கூடாது. என்ன நியாயம் இது?

நேசகுமார் என்பவர் யார்? உலக உயர்விற்கும் மனித மேம்பாட்டிற்கும் பாடுபாடும் மனித சேவகரா? அல்லது மதங்களின் தத்துவங்கள் அறிந்த ஓர் யோகியா? புழுத்துக் கிடக்கும் சேற்றை எடுத்து பிறர் மீது வீசிக் கொண்டிருக்கும் ஓர் அரைகுறை சிந்தனையாளர். ஒரு சாதாரண மனிதர். அவ்வளவுதான். சாதாரண மனிதரான இவருக்கே இத்தனை வருத்தம் என்றால் உலக மக்களின் ஐந்தில் ஒருவர் பின்பற்றும், போற்றும் மாபெரும் மனிதரான முஹம்மது (ஸல்) அவர்களை சரியான ஆதாரமின்றி தனிப்பட்ட முறையில் இகழ்ந்தும் அவமதித்தும் எழுதி வருவதை எப்படி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். இவருக்கு இஸ்லாத்தையும் நபிகளாரையும் பிடிக்காமல் இருக்கலாம், அது அவருடைய சிந்தனைக்கும் உரிமைக்கும் உள்ள விஷயம்.

இவர் என்ன கொள்கை விவாதமா செய்துவருகிறார், அவரிடத்தில் மதங்களில் மண்டியிருக்கும் தத்துவக் கோட்பாடுகளை விவாதிப்பதற்கு? இவரின் இஸ்லாமிய மறுப்பு அல்லது எதிர்ப்புக் கொள்கைகளை கடைபோட்டு விற்க முயலும்போது எதிர்ப்புகள் வரத்தானே செய்யும். அதற்கு ஏன் இத்தனை வருத்தம்?

நல்லடியாரின் மறுப்புக் கட்டுரை அதிலும் தமிழோவியத்திலேயே வருவதை எதிர்பார்க்காத நேசகுமார் சற்று மனம் தளர்ந்து போனதென்னவோ மனித இயல்புதான், அதற்காக இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தனது உண்மை முகத்தை இத்தனை வேகமாக, கேவலமாக வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்தி இருப்பதுதான் எனக்கும் சற்று வருத்தமாக இருக்கிறது. அதிலும் ஆரோக்கியம் என்றொரு (நேசகுமாரை விட) தகுதியிலும் சிந்தனையிலும் குறைவான ஒரு மனிதரின் கட்டுரைகளை மேற்கோள் காட்டும் அளவிற்கு வேதனைப் பட்டிருப்பது அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தகுதிக்கும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

முழுமையான எதையும் முழுமையற்ற ஒன்று உணரவோ அறியவோ முடியாது. முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையை முழுமையற்ற மனித அறிவால் முற்றிலும் உணரமுடியாது. முழுமை அடையத் துடிக்கும் மனிதப் போராட்டத்தில் எவன் ஒருவன் தான் முற்றிலும் அறிந்தவன் என்று நினைக்கின்றானோ அவன் தன்னை முற்றிலும் உணராதவன்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இந்தியா மிகப்பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அதனால் இவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டதாகவும் எங்கோ புலம்பியதை இங்கும் வந்து புலம்பியிருக்கிறார் நேசகுமார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றால் என்ன என்று தெரியாமல் காஷ்மீர் அரசியல் போராட்டத்தை இஸ்லாமிய அடிப்படைவாதப் போராட்டம் என்று புரிந்து வைத்திருப்பதிலிருந்தே தெரிகிறது இவரின் அரசியல் அறிவு எத்தனை என்று. முஸ்லீம்கள் எது செய்தாலும் அது இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் அல்லாதவர்கள் தீவிரவாதிகளாயிருந்தால் அது தனிப்பட்ட அல்லது ஒரு குழுவிற்கு சொந்தமான விஷயம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி சொல்லிக் கொண்டு திரிவது நேசகுமார் அய்யா?

நக்சலைட்டுகளாலும், மாவோ தீவிரவாதக் குழுக்களாலும் இந்தியா ஆண்டிற்கு பல லட்சக் கோடிகளை இழந்து வருகிறது அதற்காக வருத்தப் படமாட்டீரோ? இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நடக்கும் பிரிவினைப் போராட்டத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட கோடிகளை இந்தியா இழந்திருக்கிறது, இது எந்த அடிப்படைவாதம் அய்யா? இதற்காகக் கூட இந்தியரான நீங்கள் வருத்தப்பட மாட்டீர்களோ?

அதுசரி, எல்லாவற்றிர்க்கும் ஒரு மனிதன் வருத்தப்பட ஆரம்பித்தால் வாழமுடியாமா என்ன? நல்ல லாஜிக்தான் நேசகுமார். எனக்கு எது பிடிக்கவில்லையோ அதைத்தான் நான் எதிர்க்கமுடியும், சரிதானே அய்யா? அதைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு இஸ்லாத்தைப் பிடிக்கவில்லை, அதைப் பின்பற்றும் முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை, அதனால்தான் எதிர்க்கிறீர்கள். உங்களின் கீழ்கண்ட வரிகளையே எடுத்துக் கொள்வோம்!

ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா? அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், எந்த விஷயத்திலும் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நிச்சயமாக தனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பவன் தான் பக்கத்து வீடு சுத்தமாக இல்லை என்றால் ஆலோசனையும், அறிவுரையும் வழங்க முடியும். அப்படி செய்பவனின் அறிவுரையைத்தான் உலகம் மதிக்கும். என் வீடு இப்படித்தான் நாறிக் கிடக்கும், ஆனால் எனக்கு அடுத்த வீட்டைப் பற்றி விமர்சிக்க உரிமை இருக்கிறது என்று சொல்பவர்களின் மூளை நிச்சயமாக அழுகித்தான் இருக்கிறது என்று அர்த்தம்.

நேசகுமாருக்கு மதங்களைப் பற்றித்தான் சரியான சிந்தனை இல்லையென்றால் அரசியலிலும் அப்படித்தான் இருப்பது மிகவும் பரிதாபமான ஒன்று. அவரின் கீழ்கண்ட வரிகளைப் பார்போம்.

உதாரணமாக இடதுசாரி கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவத்தை விமர்சித்துவிட்டுத்தான் அங்கே செல்ல வேண்டியிருக்கும்

இடதுசாரியை விமர்சிப்பவன் முதலாளித்துவத்தையும் விமர்சிக்கிறான் என்றால் அவன் ஒட்டு மொத்த அரசியலையே விமர்சிக்கிறான் என்று அர்த்தம். அதுவல்லாமல் இடதுசாரியை மட்டும் விமர்சிக்கின்றான் என்றால் அவன் முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை என்றுதானெ அர்த்தம். நேசகுமாரும் அப்படித்தான். இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டும் எதிர்த்து இந்துத் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்றால் இந்து தீவிரவாத ஆதரவாளர் என்றுதானே உலகம் நினைக்கும்.

நான் அப்படியில்லை எல்லா தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் என்று எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் எதிராக நேசகுமாரால் குரல் கொடுக்க முடியுமா? இல்லை என்றால் இந்த வார்த்தை ஜாலங்கள் எதுவும் இங்கு வேண்டாம்.

தனது கருத்தைச் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது கருத்து மோதலாக இல்லாமல் அவமதித்தலும், வெறும் ஆதாரமற்றவைகளைக் கொண்டு தானாக ஒரு முடிவுக்கு வந்து சேற்றை வாரி அடித்தால் அதற்கு பெயர் உரிமை இல்லை. உரிமை மீறல் என்று அர்த்தம்.

ஒன்றை எதிர்த்து மற்றொன்றை எதிர்க்க மறுப்பவன் தனக்கு சாதகமானதை மட்டும் செய்யக்கூடிய ஒரு சுயநலவாதி என்றுதான் பொருள்படும். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பவன் தான் முதுகெலும்பு உள்ளவன்.

அய்யா, இந்துக்களின் கடவுள்களையோ அல்லது அவரது கொள்கைகளையோ இன்றுவரை நானும், அபு முஹையும், நல்லடியாரும் ஒரு போதும் கிண்டலடித்ததோ அல்லது விமர்சித்ததொ கிடையாது. காரணம் விமர்சிக்கும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் அது ஒரு இனத்தின் நம்பிக்கை அதை புண்படுத்தும் விதத்தில் எதுவும் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் கண்ணியம் காத்து வருகிறேன்.

பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை ஒரு இந்துவின் பார்வையிலிருந்து என்னால் விளக்கமாக தரமுடியும். 'கீதையின் ஜிஹாத்' என்று ஒரு விளக்கமான கட்டுரையை பிரசுரிப்பது மட்டுமல்லாமல் புத்தகமாகக் கூட வெளிக் கொணர முடியும், இறைவன் நாடினால். ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கையைக் கூட என்னால் விளக்க முடியும். பைபிளில் உள்ள தீவிரவாதக் கருத்துக்கள் முதல் பிற மத மக்களை வெறுக்கவும் கொல்லவும் சொல்லும் வசனங்களை மேற்கோள் காட்டி விவாதிக்க முடியும்.

இங்கு யாரும் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை. நியாயமான கொள்கை மற்றும் கருத்து விவாதமாக இருந்தால் வாருங்கள் விவாதிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதுதான் விளைச்சளாக இருக்கும். முதலில் நல்லடியாரின் மறுப்புரைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பிறகு பின்னூட்டமிடுங்கள்.

அழுகியது முட்டையாகவே இருக்கட்டும் உங்களின் மூளையாக இருக்க வேண்டாம்.

Wednesday, June 01, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் (பாகம் 3)

அபூஸுஃப்யான் என்ற நபித்தோழருக்காக கண்ணீர் வடித்த நேசகுமார் வழக்கம் போல் யானையைத் தடவிப் பார்த்த குருடன் போல் இங்கொன்றும் அங்கொன்றும் படித்துவிட்டு அபு அபூஸுஃப்யானுக்காக அழுது வைத்தார். அபூஸுஃப்யானின் உண்மை வரலாறு நேசகுமாருக்குத் தெரியுமா?

வாளால் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்றும் அதற்கு நபித்தோழர் அபூஸுஃப்யான்(ரலி) அவர்களின் இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் மறைத்தல் திரித்தல் செய்திருந்தார்.

அய்யா நேசகுமார், நீர் நடுநிலையில் நின்று அதை செய்தியாக எழுதி இருந்தீரென்றால் உங்களுக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறீர் என்று நினைக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்ற தலைப்பில் நயவஞ்சகத்தனமாய் எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். வரலாற்றை மாற்றி எழுதும் வேலையெல்லாம் வரலாறு தெரியாதவர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம். இஸ்லாத்தைப் பொருத்தவரை, வரலாற்றுக் குறிப்புகள் நிறையவே தெளிவாக இருக்கின்றது.

விஷயத்திற்கு செல்வதற்கு முன்னால் ஒரு சம்பவத்தை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு வாக்கில் அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல், அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார்.

அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு, குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபியின் பெரிய தந்தையின் மகனாவார்).

அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர், தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, "நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்களிடம் சொல்" என்றார்.

நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப்பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்" என்று அபூஸுஃப்யான் கூறுகிறார். அதற்கு காரணம் அந்த காலக் கட்டத்தில் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஹிர்கல் மன்னர் கேட்ட கேள்விகளும் அபூஸுஃப்யான் அவர்களின் பதில்களும் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?

அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?, அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?

பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.

கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?, அல்லது குறைகின்றனரா?

பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?

பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது.

(இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்).

கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?

பதில்: ஆம்

கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?

பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.

கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?

பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகை, உண்மை பேசல், கற்பு நெறியுடன் வாழுதல், உறவினர்களுடன் ஒட்டி உறவாடி வாழுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.

பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:
"நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.

எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் "முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்" என்று எண்ணியிருப்பேன்.

இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.

இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது "மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.

அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து பதிந்து விடுகின்றது.

இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார்.

எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.


அதே தொடரில் அபூ சுஃப்யானின் இந்த வாசக அமைப்பு இஸ்லாத்தின் பால் அவரின் உள்ளம் ஏற்கெனவே ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது

(நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், ''ரோமர்களின் மன்னன் அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு முஹம்மதின் காரியம் இப்போது மோலோங்கி விட்டது'' என்று கூறினேன். (அப்போதிருந்தே) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.) (1)

முஹம்மது நபி எவரையும் வாள்முனையில் இஸ்லாத்தை நோக்கி அழைத்தது இல்லை. இதற்கு விளக்கமாக பின்வரும் சம்பவத்தை கூறலாம்:

நபியவர்கள் தங்களின் படையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியில் இளைப்பாரினர். அம்மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த முஹம்மது நபியின் வாளை எடுத்துக்கொண்டு ஒருவர், முஹம்மதே, இப்பொழுது யார் என்னிடத்தில் இருந்து காப்பாற்றுவார் என்றார். அதற்கு முஹம்மது நபி "அல்லாஹ்தான்" (காப்பாற்றுவான்) என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார்கள். இவ்வார்த்தையின் அழுத்தத்தை கேட்டு எதிரியின் கையிலிருந்த வாள் நழுவியது. அதனை எடுத்துக்கொண்ட முஹம்மது நபியவர்கள், "இப்பொழுது யார் என்னிடமிருந்து காப்பாற்றுவார் என்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றார்". ஆனால் அவர் மறுக்கவே முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் பத்திரமாக அனுப்பிவிட்டார். (1)

ஒரு அரசரை கொலை செய்ய எத்தனித்தவனை பத்திரமாக அனுப்பிவைத்தவர்தான் முஹம்மது நபி. தவிர, இஸ்லாத்தை ஏற்காத ஒருவரை வாளினால் மிரட்டி கட்டாயப்படுத்தவில்லை.

காரணம் "இம் மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது" (4) என்பது திருக்குர்ஆனின் கட்டளை.

இப்பொழுது நேசகுமார் எடுத்துவைத்த விஷயத்திற்கு வருவோம்.

//"நான் அவரை(அபூஸுஃப்யான்) அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் "அபூஸுஃப்யானே உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?" எனக் கேட்டார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு எதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்" என அபூஸுஃப்யான் கூறினார்.

அதற்கு நபியவர்கள் "அபூஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?" என்றார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ்(ரழி) "உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!" என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார். "

[பக்கங்கள் 490-491. "ரஹீக்" ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான். தாருல் ஹுதா பதிப்பகம், மண்ணடி, சென்னை-1.]//


இதே அபூஸுஃப்யான்தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர்களில் கலந்துக்கொண்டு பல உயிர்ச்சேதங்களை ஆற்றிவுள்ளார். உஹது போரில் இவரின் மனைவி ஹிந்த் பின் உத்பா என்ற பெண் நபியவர்களின் பெரிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்து முடியாமல் போகவே அதைத்துப்பிவிட்டு, பின்பு கொல்லப்பட்ட முஸ்லிம் படையினரின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டார்(2) என்பதின்மூலம் முஸ்லிம்களின் மேல் உள்ள அவர்களின் பகைமை என்னவென்று விளங்கும்.

இதே உஹதுபோரில்தான் முஹம்மது கொல்லப்பட்டுவிட்டார் என்று அபூஸுஃப்யானிடம் இப்னு கமிஆ என்பவன் கூறகேட்டவுடன் அச்செய்தியை அறிந்துக்கொள்ள மகிழ்ச்சியால் உந்தப்பட்டு மலையின் மீது ஏறி உங்களில் முஹம்மது இருக்கிறாரா என்று கேட்கிறார். ஆனால் முஹம்மது நபி உயிரோடு இருக்கும் செய்தியை முஸ்லிம்களின் தரப்பிலிருந்து உமர் அவர்கள் அறிவித்தார்.

முஸ்லிம்கள் மிகப் பெரிய அளவில் கொல்லப்பட்டதை பார்த்து, "எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது" என்றார் அபூஸுஃப்யான்.(1)

பிறகு அடுத்த ஆண்டு அரபி மாதம் ஷஅபானில் போருக்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கா நோக்கி திரும்பினார்.(2)

உஹதுப் போரில் கிடைத்த உத்வேகத்திலும், துணிச்சலிலும் முஸ்லீம்களை போருக்கு அழைத்தது இந்த அபூஸுஃப்யான் என்பது நேசகுமாருக்கு தெரியாமல் போனதெப்படி? போருக்கு அழைக்கும் ஒருவன் எப்படி உயிருக்குப் பயந்தவனாக இருப்பான்?


ஹிஜ்ரி 8, ரமளான் மாதம் பிறை 10-ல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 10,000 பேர் தாங்கிய படைவீரர்களுடன் மக்கா நோக்கி சென்றார். நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களை சந்திக்க மதீனா நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது மக்காநோக்கி வரும் முஸ்லிம்களின் படையை ஹுதைபா என்னுமிடத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.

வரும் வழியில் முஸ்லிம்கள் "ஃபாத்திமா பள்ளத்தாக்கு" என்று கூறப்படும் மர்ருள் ளஹ்ரான் என்னுமிடத்தில் தங்கியிருக்கும்போது, அப்பாஸ்(ரலி) அவர்கள் முஹம்மது நபியின் வாகனத்தின் மீதேறி மக்கா குறைஷிகள் யாரேனும் தென்பட்டால் அவர்களுக்கு முஹம்மது நபி படையெடுத்துவரும் செய்தியை தெரிவித்து முஸ்லிம்கள் மக்காவுக்கு நுழைவதற்கு முன்னால் அவர்களுக்கு பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள் என்பது அப்பாஸின் நோக்கமாக இருந்தது.

முஹம்மது நபி படையெடுத்து வரும் செய்தி மக்கா குறைஷிகளுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்று பயத்துடன் எதிர்பார்த்து இருந்தார்கள். வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்திகளைப்பற்றி துருவி துருவி விசாரித்துக்கொண்டிருந்தார் அபூஸுஃப்யான். முஸ்லிம்கள் மேற்கண்ட இடத்தில் தங்கியிருந்த இரவுதான் அபூஸுஃப்யான், ஹக்கீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வரக்கா என்ற மூவரும் நிலவரங்களை அறிந்துக்கொள்வதற்காக மக்காவைவிட்டு வெளியேறுகிறார்கள்.

அவ்விரவில் முஸ்லிம்கள் படையில் பத்தாயிரம் நெருப்பு குண்டங்களை எதிரிகளுக்கு தனது படையின் வலிமையை காட்டுவதற்காக மூட்டினர். அதனை தூரத்திலிருந்து கண்ணுற்ற அபூஸுஃப்யான் "இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப்போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை என்று புதைல் என்பவரிடம் கூறினார். அவ்விடத்தில் அபூஸுஃப்யான் அவர்களின் பேச்சை குறைஷிகளை தேடிவந்த அப்பாஸ்(ரலி) அவர்கள் கண்டுக்கொண்டார்கள்.

அப்பாஸ் அவர்களைப் பார்த்து அபூஸுஃப்யான் இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில் "உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்" என்று கூறினார். அதற்கு அப்பாஸ்(ரலி) அவர்கள், "இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்" என்று கூறுகிறார்.

தப்பிப்பதற்கு வழி என்னவென்று அபூஸுஃப்யான் கேட்க, அதற்கு அப்பாஸ் உன்னை நபியவர்களிடம் அழைத்துச்சென்று உனக்கு பாதுகாப்பு தேடுகிறேன் என்று அபூஸுஃப்யானை அழைத்துச் செல்கிறார். அபூஸுஃப்யானின் மற்ற இருதோழர்கள் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.

பாதுகாப்பு வழங்குவதற்காக அப்படையின் தளபதியிடமே செல்கிறார். இப்பொழுதுதான் நேசகுமார் குறிப்பிட்ட அந்த உரையாடல் நடக்கிறது.

தன்னை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்த எதிரிகளை போர் சந்தித்தால் முஸ்லிம்கள் கொன்றுவிடுவார்கள் எனும்போது அந்தத் தருணத்தில்தான் இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தன் உறவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சொன்ன வார்த்தைதான் தவிர முஹம்மது நபியின் வார்த்தை அல்ல. முஹம்மது நபி எதிரிகளை போரில் சந்திக்க பயப்படவும் இல்லை. அவரிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை மன்னிக்காமல் விட்டதும் இல்லை. இப்படித்தான் தனது சிறிய தந்தையின் ஈரலை மென்று விழுங்க நினைத்து அபூஸுஃப்யான் அவர்களின் மனைவியையும் ஹம்சா அவர்களை மறைந்திருந்து கொன்ற வஹ்ஷி என்பவரையும் மன்னித்தார்.

தந்தையர்கள் உருப்படாமல் போய்விடுவாய் ஒழுங்காக படி என்று சொல்வது, மகனை உருப்படாமல் போகச் செய்ய மிரட்டினார்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். தனது உறவினரான அபூஸுஃப்யானை காப்பாற்ற அப்பாஸ் அவர்கள் சொன்ன கூற்றுதான் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுவதற்கு ஆதாரமாக தெரிகிறது நேசகுமாருக்கு.

இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" (3) என்ற வசனத்தை யூசுஃப் நபி கொடுமை செய்த தன் சகோதரர்களை மன்னித்ததுபோல் தானும் மன்னிக்கிறேன் என்கிறார் முஹம்மது நபியவர்கள்.

அதற்கு அபூஸுஃப்யான் அவர்கள்:

இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்
முஹம்மதின் வீரர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக
நான் போர்க்கொடி சுமந்தபோது
இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்
இது எனக்கு சிறந்த நேரம்
நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்
அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்
என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்
நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே
அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி
அல்லாஹ்வை காட்டித் தந்தார்

என்ற கவிதையை பாடிக்காட்டுகிறார். (2)

அப்பாஸ் அவர்கள் அபூஸுஃப்யான் அவர்களிடம், "உடனடியாக நீ உன் கூட்டத்தினரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவிப்புச் செய்!" என்கிறார். அபூஸுஃப்யான் அவர்கள் மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு "குறைஷகளே! இதோ.. முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பு பெறுவர்" என்று முழக்கமிட்டார்.

அபூஸுஃப்யானின் இந்நிலையை கண்ட அவரது மனைவி அபூஸுஃப்யானின் மீசையை பிடித்திழுத்து "கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்" என்று கூறுகிறார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான், மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது. எனது பேச்சைக் கேளுங்கள்!. இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெறுவர்" என்று கூறினார். அதற்கு "அல்லாஹ் உம்மை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?" என்று மக்கள் கேட்டனர். "யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார். யார் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனிதமிக்க கஃபா பள்ளிக்கு செல்வாரோ அவரும் பாதுகாப்பு வெறுவார்" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளியை நோக்கி ஓடினர்.

தன்னைத்தேடி தேடி கொல்லவந்தவரை (அபூஸுஃப்யான்) மன்னித்து அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பு தேடியவர்களையும் மன்னித்தவர்தான் முஹம்மது நபி.

அபூஸுஃப்யான் மிரட்டப்பட்டாரா அல்லது பாதுகாக்கப்பட்டாரா என்னும் மேற்கண்ட விபரங்கள் நேசகுமார் ஆதாரமாக எடுத்துவைத்த அதே "ரஹீக்" புத்தகத்தில்தான் (பக்கங்கள் 487-492) இருக்கிறது. காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பதுபோல, இவருக்கு படிப்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிராகத்தான் தெரியும் போல.

ஆதாரங்கள்:
(1) புகாரி
(2) இப்னு ஹிஷாம்
(3) அல்குர்ஆன் 12:92)
(4) அல்குர்ஆன் 2:256)

Thursday, May 26, 2005

மறைத்தல், திரித்தல், பொய் பேசுதல்

கருப்பண்ணசாமியின் வரவால் நேசகுமாருக்கு 'கருப்பாவேசம்' வந்து மயிலாடுதுறை சிவாவின் 'இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா' என்ற பதிவில் வதவத (நன்றி ஆரோக்கியம்) என்று எனக்கு பதில் எழுதிவிட்டார். மூன்று மாத காலமாக இந்த கருப்பண்ணசாமி எங்கே போயிருந்தார்?

ஆக நான் கண்ணியமாகவும், மரியாதையாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரக்கில்லை என்பதால் பதில் இல்லை. கேட்டால், இன்னும் படிக்கவில்லை, யாராவது படித்து அதிலிருந்து ஒன்றிரண்டு முக்கியமானதை எடுத்துச் சொன்னால் பதில் சொல்கிறேன், பதில் சொல்வேணா என்று தெரியவில்லை என்று சமாளிப்புகள், தடுமாற்றங்கள் முடிவில் தலைமறைவு. வார்த்தை விளையாடல்கள் செய்து, ஒன்றை இரண்டாக்கி அல்லது ஒன்றுமே இல்லாததாக்கி எழுத சந்தர்ப்பம் கிடைத்தால் வதவத பதில்கள் வந்துவிடும்.

இரண்டில் இரண்டைக் கூட்டினால் நாலு வரும் என்று சொல்லத் தெரியாதவன், அல்ஜிப்ரா கணக்கு சொல்லிக் கொடுக்க மீசையை முறுக்கிக் கொண்டு வந்த கதையாய், சாதராணமாக நேசகுமார் எழுதியதிலிருந்தே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தற்போது தான் கண்ணியம் காத்ததாக கதை எழுதுகிறார். உலகில் கோடான கோடி மக்கள், முஸ்லீம் முஸ்லீமல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் போற்றும் நபிகள் நாயகம் அவர்களை, இவர் இகழ்ந்து பேசும் போது எங்கே அய்யா உங்கள் கண்ணியம் காணமல் போனது? அடுத்தவர்களுக்கு கண்ணியம் கொடுத்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்ற பொதுவான சாதாரண உண்மை உங்களுக்கு தெரியாமல் போனதேன்.

பொய் பேசுவது யார்?
எதைப் பொய் என்கிறீர்கள் அப்துல்லாஹ்? திருக்குர்ஆன் பொய் என்கிறீர்களா? இப்மு சஅது யூதர் என்கிறீர்களா? ஸஹி முஸ்லிம் இஸ்லாத்தின் எதிரி என்கிறீர்களா? அல்லது நபிகளார் பொய்யும் புரட்டுமாய் தனக்கு வசதிப்பட்டவாறு எதையெதையோ பேசிவிட்டுப் போனார் என்கிறீர்களா?

நீங்கள் பேசுவதுதான் பொய். எனது 'நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்' என்ற பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இல்லை, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள் நேசகுமார் அவர்களே? நீங்கள் பேசுவது உண்மைதான் என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் போது ஏன் உதறிவிட்டு போகிறீர்கள்? இதைத்தான் திராணியில்லை என்று உலகத்தார் சொல்வது, உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்குப் புரியும் என்று நான் நினைப்பது தவறோ என்னவோ தெரியவில்லை.

மனைவியிடம் காமத்தை அடக்க முடியாதவர் வழி காட்டியா?
நான் கேட்கிறேன், மனைவியிடம் ஏன் ஒருவர் காமத்தை அடக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை, விளக்கம் கொடுங்கள் நேசகுமார் அவர்களே! மனைவியிடம் காமத்தை அடக்கிக் கொண்டு, மற்ற பெண்களிடம் செல்பவர்களைத்தான் முற்றும் துறந்த முனிவர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்களோ? அப்படிப் பட்டவர்களின் வழிகாட்டுதலைத்தான் ஏற்றுக் கொள்வீர்களோ? கணவன் மனைவிகள் ஜாக்கிரதை! காமத்தை மனைவியிடம் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்று நேசகுமார் அவர்கள் புது விதி செய்து புரட்சி செய்ய இருக்கிறார். மனைவி இருப்பவர்கள் எல்லாம் இனி காமத்தை அடக்கி மோட்சம் பெறும் வழியை நேசகுமார் அவர்கள் சொல்லித் தருவார்! மனைவியிடம் தனது இச்சைகளை, உடல் பசியை தீர்த்துக் கொள்பவர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் இனி ஏற்றுக் கொள்ள அறுகதை அற்றவை என்று நேசகுமார் ஆலோசனை வழங்க வந்துவிட்டார்.

'சஹி முஸ்லிம், யாரோ ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்ட முகமது நபியவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ஜைனப் அவர்களை இழுத்து உடலுறவு கொண்டார்'

இது நேசகுமாரின் கூற்று.

இந்த செய்தி இங்கே அரை குறையாக நேசகுமாரால் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு பெயர்தான் 'மறைத்தல்' என்று பெயர். முழு செய்தியையும் சொல்லாமால் தனது வசதிக்கேற்றவாறு அதை கொச்சைப்படுத்திச் சொல்வதற்கு பெயர்தான் 'திரித்தல்'. இந்த இரண்டையும் செய்யும் மனிதர்களுக்குப் பெயர்தான் 'பொய்யர்'.

இங்கே குறிப்பிடப்படும் ஜைனப் என்பவர் யார்? நபிகாளாரின் மனைவி. இந்த செய்தியை சொன்னவர் யார்? நபிகள் நாயகம் அவர்கள். ஏன் சொல்கிறார்? காமப்பசி ஏற்படுபவர்கள், இவ்வாறு உணர்ச்சிவசப்படுபவர்கள், அதை தனது மனைவியிடம் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினைக்காகத்தான் அவ்வாறு அறிவிக்கின்றார். அதைத்தான் அந்த செய்தியின் முடிவில் இருக்கிறது. ஏன் இவ்வாறு சொல்லப்பட்டது? அந்த காலக் கட்டங்களில் உடலுறவு ஒழுக்கமற்ற, உணர்ச்சிகளுக்கு உந்துதலாகி தனக்கு சொந்தமில்லாத பெண்களிடம் உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது. அதை முஸ்லீம்கள் செய்யக் கூடாது என்பதுதான் இதிலிருந்து அன்றைக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம். இதை புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்தான் இதைக் கொச்சைப் படுத்தி இன்றைய கால மன நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் தேட முற்படுகின்றனர்.

இப்படி அநாகரீகப்படுத்தி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் கருப்பண்ணசாமியின் தயவில் நேசகுமார் வதவத என எழுதிவிடுவார். ஆனால் அறிவுப்பூர்வமான ஆழமான விவாதங்கள் என்று வந்தால் என்னவோ இவருக்கு மட்டும்தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்பது போல் அலுத்துக் கொள்வார்.

இந்த செய்தியைப் பற்றிய விவாதத்தில் இருக்கும் போது மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது தவறு, அது அவளுடைய உரிமையை மதிக்காதது என்றெல்லாம் இச்செய்திக்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் செய்யப்பட்டன. முதலாவதாக இங்கே 'அனுமதி இல்லாமல்' என்ற வார்த்தையே இல்லை. இரண்டாவதாக உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?

எங்கிருந்து வந்தார் இல்லாத மருமகள்?
நபிகளாரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள் அல்லது பதியப்படாத செய்திகள் என்ற ஒன்றும் இல்லை. நபிகாளாருக்கு பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைந்துவிட்டார்கள் என்றுதான் வரலாற்று குறிப்புகளும், ஆவணங்களும் தெரிவிக்கின்றன? அப்படியிருக்கும் போது எங்கிருந்து வந்தார் இந்த இல்லாத மருமகள்? இதற்கு பெயர்தான் 'திரித்தல்' நேசகுமார் அவர்களே.

பதில் தாருங்கள். காத்திருக்கிறேன்.

கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்?
பொதுவாக அனுமதி என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியும். மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட எல்லைகளுக்குக் கூட வரையறைகள், விதிமுறைகள் இருக்கும் போது இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஆலயமாக உலகத்தாருக்கு அறிவிக்கப்பட்ட மக்காவிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றது. அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால் கஃபாவில் நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. எப்படி அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் விசா வாங்க வேண்டும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு நேர வகையில் நடந்து கொள்வேன், அந்த நாட்டின் சட்டங்களை மதிப்பேன் என்றெல்லாம் உறுதி மொழி அளிக்க வேண்டுமோ அதே போன்று இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட கஃபாவிற்கு வருவதற்கு அந்த இறைவனிடம் உறுதி மொழி அளிக்க வேண்டும், அந்த உறுதிமொழிதான் ஏக இறைவனை ஏற்றுக் கொள்வதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்வது. இதை உளமாறச் சொல்லிவிட்டு நேசகுமார் அவர்களும் செல்லலாம், அவரை புலிப் பாண்டியும் தொடரலாம்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப்பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் வசனம் 9:28)

இந்த மேற்கண்ட வசனம், இணை வைத்து வணங்குபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கின்றது. இறைவனுக்கு இணை வைக்காமல், முஹம்மதை நபி என்று ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக செல்லலாம். இந்த வசனங்களில், கீழ் சாதி, சானாதனி என்ற பாகுபாடுகளெல்லாம் எங்கிருந்து வந்தது. நேசகுமாருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சனாதனியாக, மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அந்த இறைவனை, சிலைகளை இன்னும் என்னென்ன மாரியாதைக்கு உரியவைகளாக அவர்கள் கருதுகிறார்களோ அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள்தான், அவர்களுக்குள் வணங்குவதில் வேறுபாடு இல்லை, ஆனால் வெறுபாடுகள் பிறப்பினால்தான். விஷ்ணுவை மேல்சாதிக்காரணும் வணங்கலாம், கீழ்சாதிக் காரணும், ஆனால் கர்ப்பகிருகத்தில் செல்ல அனுமதி மேல் சாதிக்காரர்களுக்கு மட்டுமே.

ஆனால் இந்த இறை வசனத்தில் இணை வைப்பவர்களைத்தான் அசுத்தமானவர்கள் என்று சொல்கிறது. அது மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் சரி.

இந்த வசனத்திற்கும், நேசகுமாரின் கீழ்சாதி விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இதைத்தான் 'திரித்தல்' என்று சொல்வது.

கஃபாவின் கஸ்டோடியனுக்கு மிகுந்த மரியாதை
அது என்ன மிகுந்த மரியாதை? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். நாங்களும் புரிந்துக் கொள்கிறோம். இப்படி இல்லாததை சொல்வதற்கு பெயர்தான் பொய் பேசுதல் என்று பெயர்.

என்னவோ உலகத்திற்கு தெரியாத ஒரு விஷயத்தைச் சொன்னதுபோல் நேசகுமாரின் இந்த கண்டுபிடிப்புக்கு புலிப்பாண்டியின் ஜால்ரா? முடிந்தால் புலிப்பாண்டிக்கூட சொல்லலாம் அது என்ன பொல்லாத மரியாதை என்று, நாங்களும் தெரிந்துக் கொள்ளலாம்.

அஹமதியாக்கள்
அஹமதியாக்களைப் பற்றி ஏற்கனவே நேசகுமார் வேறு சில தளங்களில் எழுதிய திரித்தல் மறைத்தல் வேலைகளை படித்துதான் இருக்கிறேன். ஒன்று செய்வோமா நேசகுமார் அய்யா? எனது பழைய கேள்விகளுக்கு விரைவில் பதில் சொல்லுங்கள், பிறகு இந்த அஹமதியாக்களைப் பற்றி நாம் ஒரு சிறப்பான விவாதத்தைத் தொடங்கலாம்.

கஃபா உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம்
சரிதான். யார் இல்லை என்றது. அல்லாஹ்வின் அறிவிப்பின்படி கஃபா என்பது உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே இறைவன் அதே திருக்குர்ஆனில் சொன்ன முஹம்மது நபி உங்களுக்கோர் ஒரு அழகிய முன் மாதிரி என்ற எடுத்துக்காட்டை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? ஒன்றை ஏற்றுக் கொண்டு, இன்னொன்றை மறுப்பதென்பது, யூதர்களின் வழியாக இருந்தது. அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அதையேதான் நீங்களும் சொல்கிறீர்கள். தனது மனதின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஏற்பதும் மறுப்பதும் நியதி அல்ல, அது நம்பிக்கையும் அல்ல.

நேசகுமாரின் திருக்குர்ஆன் விளக்கங்களைப் பார்க்கும்போது அது அவருடைய புரிந்துக் கொள்ளும் கடினத்தையும் மற்றும் வேண்டுமென்றே கையாளப்படும் வன்முறை வாதமாகத்தான் தெரிகிறது.

ஒன்றை நேசகுமாரும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வாழ்வின் பெரும்பாண்மையான இடற்பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத்தான் சொல்கிறது. அதே நேரம் அதன் தீர்வுகள் இன்றைக்கு கடினமாகவோ அல்லது அறிவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாததகவோ இருந்தாலும் அது பிரிதொரு (எதிர்) காலத்தில் அவசியமாக இருக்கும். அதனால்தான் அது எக்காலத்திற்கும் ஏற்ற மறையாக இருக்கிறது. திருக்குர்ஆன் அனுமதிப்பதை கட்டளையாக அர்த்தம் செய்து கொண்டு அதற்கு விளக்கமளித்து வில்லங்கம் செய்யும் நேசகுமார் இதைத் தெரிந்தே செய்கிறார் எனும்போது அவரை "பொய்யர்" என்று சொல்லுவதில் என்ன தவறு?.

Sunday, May 15, 2005

ஆரோக்கியமான விவாதம்

நண்பர் ஆரோக்கியம் எனது வலைப்பதிவில் பின்னூட்டத்தின் மூலமாக 'நான் விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற உரிமையில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையே என்றும் அது தொடர்பாக தனது பதிவிலே ஒரு சில விளக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது இந்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னர் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

'முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள்' என்ற தீர்மானத்துடன் விவாதம் செய்ய வருகிறாரா? அல்லது இஸ்லாம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விவாதம் செய்ய வருகிறாரா? திறந்த மனதுடன் விவாதம் செய்தால் அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும், இல்லையென்றால் நேசகுமார் அவர்கள் செய்வதுபோல் அது ஒரு 'எழுத்து தீவிரவாதமாகத்தான்' அமையுமே ஒழிய 'கருத்து மோதலாக' இருக்காது. ஆம், கண்டதையும் கேட்டதையும் வைத்து, கதை எழுதி அங்கங்கே வினாக்களையும் விமர்சனங்களையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கங்களையோ அல்லது விடைகளையோ படிக்க மாட்டேன் என்று எழுதுவதற்கு 'எழுத்து தீவிரவாதம்' என்றுதான் பெயர்.

இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் செய்வோரில் பெரும்பாலோர், இஸ்லாத்திற்கெதிரான வெப்சைட்டுகளிலும், புத்தகங்களிலும் உள்ளதைப் படித்துவிட்டு, அதில் தனக்கு சாதகமான கருத்துள்ள விமர்சனங்களாக இருந்தால் அதை எடுத்து ஆஹா ஓஹோ என்று அலங்காரப் படுத்தி எழுதுவதே இயல்பு. ஆரோக்கியம் அவர்களும் அப்படியா?

அப்படித்தான் என்றால் இங்கொன்றும் அங்கொன்றுமாக விவாதம் செய்து பலனில்லை.

ஆரோக்கியத்தின் வினாக்களிலிருந்தே விவாதம் தொடங்கலாமா? சரி என்றால் எனது வினாக்களுக்கு முதலில் அவர் விடையளிக்கட்டும், பிறகு முஸ்லீம்களுக்கு மதம் மாற உரிமையிருக்கிறதா என்ற கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்.

எனது கேள்வி (1) இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதமாக போற்றப்படுகிறது?

நன்றிகள்.

Thursday, May 05, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]

நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு பிரச்சாரங்கள் மட்டுமே. அதையும் ஒழுங்காக செய்கிறாரா என்றால் அதிலும் குறைபாடு. காரணம் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வேண்டுமென்றே ஒரு தவறை எத்தனை காலம்தான் செய்யமுடியும். அவரும் மனிதர்தானே, அதனால அவருக்குள்ளேயே முன்னுக்கு பின் முரன்பாடுகளும், குழப்பங்களும், தடுமாற்றமும். நடக்கட்டும்.

இடைப்பட்ட காலத்தில் அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று வழக்கம்போல் புலம்பல்கள். வெறும் புலம்பல்கள்தானே இதற்கு ஏன் பதிலும் விளக்கமும் என்று ஒரு சிலர் கேட்கலாம். பொது இடங்களில் ஒரு மனிதர் அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ இன்னும் பைத்தியக்காரன் போல் போவோர் வருவோர் மேல் எல்லாம் சேற்றை வாரி அடித்துக் கொண்டிருந்தால் அதை நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா? அது போன்றுதான் இந்த பதில்களும் அவ்வப்போது அவசியமாகிறது.

இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர் சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். நான் அப்படித்தான் சேறுகளையும் சாக்கடைகளையும் அள்ளித் தெளிப்பேன், சொரணையும் புத்தியும் இருந்தால் துடைத்துக் கொண்டு செல்லட்டும், இல்லையென்றால் சுமந்துக் கொண்டுதான் செல்லட்டுமே என்று சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். தொடரட்டும்.

'தெருவில் நடைபாதையில் கிடக்கும் முட்களை ஓரமாக எடுத்தெரிவதும்' இறைவழிபாடுதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கிணங்க அறிவுப்பாதையின் நடுவிலே வேண்டுமென்றே நேசகுமார் போன்றவர்களால் எடுத்தெரியப்படும் அறிவுக்கு சம்பந்தமில்லா விஷயங்களை களைவதும் இறைவழிபாடுதான். இப்படி ஒரு வழிபாட்டை செய்வதற்கு வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

'நபிகளார் கடவுளைவிட அதிகாரம் நிறைந்தவராக கற்பிதம் செய்யப்படுகின்றன' என்று நபிகளாரை பிரதம மந்திரி போன்றும் கடவுளை ஜனாதிபதி போன்றெல்லாம் இவர் கற்பிதம் செய்து கதை எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறார். கண்டதையும் கேட்டதையும் வழிபாடு செய்து, கடவுளாக்கி, காணிக்கை செலுத்திவாழும் வழக்கத்தை கொண்டவர்களுக்குத்தான் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாது.

மாமனிதர் என்ற தலைப்பிலே அபூ உமர் அவர்கள் எழுதியதை நேசகுமாரும் அவருடைய எழுத்தை ஆராதிப்பவர்களும் கொஞ்சம் படித்துப் பார்த்தால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

'தம்மை உண்மையாக விசுவாசித்தவர்களுக்கும், தமது மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் சிபாரிசு செய்வார்' என்று எழுதிவிட்டு, கடத்தல்காரர்களுக்கும், குழந்தைகளை கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும், மாற்றுமதப் பெண்களை கற்பழிப்பு செய்பவர்களுக்கும் பரிந்துரைப்பார்' என்று விஷம் பூசிய எழுத்துக்களை எழுதியிருந்தார். இவரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?

'அல்லாஹ்வின் கருணையைக் கொண்டுதான் நபி அவர்களே, தானே சொர்க்கம் செல்லமுடியும்' என்று சொல்லியிருக்கும்போது எப்படி நபியவர்கள் கடவுளைவிட அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடியும். அவருடைய தோழர்கள் ஆச்சர்யத்துடன் 'யா ரசுலூல்லாஹ்.. உங்களுக்கே இந்த நிலைதானா? என்று கேட்கும்போது.. ஆமாம் என்று பதிலளித்தார்கள்.

வெறும் முஸ்லீமாகிவிட்டால், ஏக இறைவனை ஏற்றுக் கொண்டுவிட்டால் மட்டுமே ஒருவன் நபிகளாரின் சிபாரிசிற்கு ஆளாகிவிடமுடியும் என்று நினைப்பது எப்படியிருக்கிறதென்றால் ஒருவன் பிராமணனாக பிறந்துவிட்டால் அவன் எப்படி பிரம்மனுக்கு நெருங்கியவனாக கருதப்படுகிறானோ அப்படியிருக்கிறது. ஒரு மாணவன் எல்லா நாட்களிலும் பள்ளி சென்று வந்துவிட்டால் பாஸாகிவிடமுடியுமா? நேசகுமார் போன்ற ஆசிரியர்கள் இருந்தால் அதுகூட சாத்தியமானலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. படிக்க வேண்டாம், பரிட்சை எழுத வேண்டாம், பள்ளியையும் ஆசிரியரையும் நம்பி ஏற்றுக் கொண்டு தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்துவிட்டால் மட்டும் போதும், ஆசிரியர் சிபாரிசு செய்து பாஸாக்கிவிடுவார்.. என்னய்யா வியாக்கியானம் இது?

அரசியல் அச்சுறுத்தல்கள் முடிந்து இப்போது ஆன்மீக அச்சுறுத்தல்கள் என்று நேசகுமார் வளர்ச்சி அடைந்துள்ளார். அதாவது மற்ற மதங்களெல்லாம் நரக எச்சரிப்பை விட்டு வளர்ச்சி அடைந்துவிட்டனவாம், இஸ்லாம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருந்துக் கொண்டு நரகம் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றனவாம். இந்து மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் இருக்கிற மதகுருமார்கள் எல்லோரும் கூடி நரகம் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களை எல்லாம் களைந்துவிட்டு இனி மக்களுக்கு அன்பை மட்டுமே போதிப்பதென்று முடிவெடுத்துவிட்டார்களோ?

'ஏனைய மதங்களெல்லாம் நரகக் கட்டங்களைவிட்டு நகர்ந்துவிட்டன' என்ற அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஏனைய மதங்களில் இருப்பவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், தீயதை ஒழிப்பவர்களாகவும், தியாகச் சிந்தனை கொண்டவர்களாகவும் மாறிவிட்டதால் மற்ற மதங்கள் எல்லாம் இனி நரகத்தைப் பற்றி பேசுவதில்லை என்று மாறிவிட்டனவோ? ஏன் இப்படி தடுமாறுகிறார் நேசகுமார். நரகத்தைவிட்டு தாண்டிவிட்டதனால்தானோ பெரியவாளும் சிறியவாளும் சேர்ந்து இப்படி காமக் கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

எல்லா மதத்திலும் எல்லா அயோக்கியர்களும் இருக்கிறார்கள். மதத்தின் பெயர் சொல்லி தன் சொந்த வயிற்றை நிரப்பும் மனிதர்கள் இருக்கிறார்கள் இதுதான் எதார்த்தம். எதார்த்தத்தை எழுதுவதாக வேறு ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். பெரும்பான்மையான முஸ்லீம்களைப் பற்றி எதார்த்தத்தை எழுதுவதாக எழுதியிருக்கிறார். முஸ்லீம்களும் தவறு செய்பவர்கள்தான், இதில் என்ன விந்தை. சின்ன சாமியார்களிடம் தொடங்கிய இந்த காமக் கலாச்சாரம் இப்போது பெரிய சாமியார் வரை வந்துவிட்டது, இது எதார்த்தம். இந்த எதார்த்தத்திற்க்காக இருக்கிற சாமியார் மடங்களை எல்லாம் இனி மூடிவிட வேண்டியதுதானே. மாறிவரும் இந்து வேதங்களிலிருந்து இனி சாமியார், சந்நியாசி போன்ற விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டால் இது போன்ற தவறுகள் இனி நடக்காதுதானே. எதார்த்தம் அய்யா.. கோபாப் படாதீர்கள்.

வழக்கம்போல் ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்று எந்தவிதமான உள்வாங்குதலையும், தான் எழுதியது என்னவென்று திருப்பிப் பார்க்காமலும் பல விஷயங்களை, தவறுகளை எழுதியிருக்கிறார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் 'ஜிஸ்யா வரியாகவும் கொள்ளையிட்ட பணமாகவும் 10,000 திர்ஹம்' அரசு கஜானாவில் இருந்ததென்று எழுதி அதை வைத்துக் கொண்டு நபிகளின் வாரிசுகள் அனுபவித்தது போன்றும் எழுதியுள்ளார். இதற்கான விளக்கமும் ஆதாரமும் வேண்டும். (ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று எனது முந்தைய பதிவில் விளக்கியுள்ளேன்) அதாவது எங்கிருந்து இந்தப் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்கள், நபிகளின் வாரிசுகள் யார் யார் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள் என்ற விபரம் தரமுடியுமா?

இது மூன்றாவது கேள்வி.

அடுத்து ஒரு அட்டவணை தயார் செய்து பதிவில் வைக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு அட்டவணை எனது பதிவில் இருந்தால் அடுத்தமுறை நேசகுமாருக்கு அதைப் பார்த்து இன்னென்ன கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்று சாவகாசமாக பதிலளிக்கலாம் அல்லவா? காரணம் அவருக்கு அவதூறுகளை வீசி வீசி எதற்கு யார் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை, அதனால்தான் அபூ முஹை அவர்களின் கேள்விகளை வேறு ஒருவரிடம் (அனானிமஸ்) கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(ஒரு வேளை இப்படி அவருடைய பதிவில் அனானிமஸாக பதில் எழுதுவதும் அவரேதானோ? எதார்த்தமான சிந்தனை அய்யா.. எங்களுக்கெல்லாம் எதார்த்தமான சிந்தனை வரக்கூடாதா?)

Thursday, March 31, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார்.

அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் துவங்கிவிட்டதென்பதே அவரின் இத்தன்னிலை விளக்கத்தின் காரணம்.

சத்தியத்தை எடுத்தியம்புவது, அதை எப்பாடு பட்டாகிலும் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடுவது என்று முடிவெடுத்து சத்தியத்திற்க்காக போராடும் ஒரு மனிதன் தனது இயலாமையை இப்படியெல்லாம் பறைசாற்ற மாட்டான். காரணம் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை எப்படியாயினும் நிலை நிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியும் அதற்கான உதவியும் தன்னிடத்திலிருந்தே அவன் தேடிக் கொள்ளவேண்டுமே தவிர்த்து, தன்னால் இயலவில்லையே என்று புலம்புவது சரியல்ல.

நேசகுமார் உள்வாங்குதலும் காலம் தாழ்த்துதலும் என்று ஒரு நல்ல விளக்கம் அளித்திருந்தார். இப்படி காலம் தாழ்த்துதலும், உள் வாங்குதலும் ஒரு கருத்தை சொன்ன மனிதன் தனது கருத்தை பிரிதொரு நேரத்தில் அலசிப் பார்க்கவும் அது சரியா தவறா என்று அந்த மனிதனே புரிந்துக் கொள்ளவும் அவகாசம் இருக்கும் என்றெல்லாம் நல்ல விளக்கம் கொடுத்தார். பிரச்சினை என்னவென்றால், இப்படி விளக்கம் கொடுததவர் எப்போதாவது தான் எழுதியதை திரும்பிப் பார்த்திருப்பாரா? தான் எழுதியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று உள்வாங்குதல் செய்திருப்பாரா?

இல்லை. செய்வதில்லை என்பது அவரது இத்தனை கால இடைவெளி இருந்தும் எதையாவது எழுதி வைப்போம் என்பதிலிருந்து நன்றாக காட்டுகிறது. காரணம் மிகச் சாதாரணமானது. அதாவது, உள்நோக்கு நிறைந்த அவதூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எழுதி வருகிறார்.

அப்படி அவர் எழுதியதிலிருந்து தற்போது எனது இரண்டாவது கேள்வியாக இங்கே முன் வைக்கிறேன். இதுவரை எனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. பகரமாக ஹமீது ஜாபருக்கு பதில் சொல்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தும் அவர் எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதை நான் பிறகு எழுதுகிறேன். காரணம் இன்று அவர் எழுதியதிலிருந்து ஒருவேளை தனது உள்வாங்குதல் என்ற பயிற்சியை தொடங்கலாம் அல்லவா? அதற்கு இன்னுமோர் அவகாசம் கொடுப்போம்.

இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

நேசகுமாரின் இஸ்லாத்திற்க்கு எதிரான விஷப் பிரச்சாரத்திற்கு இன்னுமொரு ஆதாரம். நேசகுமார் தனது கட்டுரைக்கு ஆதாரத்தை தருகிறேன் என்று அவ்வப்போது எவ்வாறு மறைத்தும் திரித்தும் எழுதுகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம். இவரின் கீழ் கண்ட கட்டுரையில்


சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற கற்பழிப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அமெரிக்காவில் அதிகமாகவும், சவுதி அரேபியா பொன்ற நாடுகளில் குறைவாகவும் நடப்பதை அவ்வப்போது கோடிட்டு காட்டுவது முஸ்லீம்களுக்கு வழக்கம், ஆனால் அதற்கு புதிதாக ஒரு ஷரீஅத் சட்டத்தை காரணமாக கற்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நேசகுமாரின் மேல் சொன்ன கட்டுரையில், இரண்டு விஷயங்களை ஒன்றாக குழப்பி இஸ்லாத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விஷமத்தனாமாக அறிமுகப் படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இஸ்லாம் சொல்லும் அவதூறு செய்பவர்களுக்கான குற்றவியல் சட்டத்தை, கற்பழிப்புக்கான தண்டனை என்று இரண்டையும் குழப்பி தன் விஷ வாதத்திற்கு ஆதாரம் தேடியிருப்பதை காணலாம்.

ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் சமூகத்தில் அவளுக்கு ஏறபடக்கூடிய விபரீதமும், ஒரு ஆணைப் பற்றி தவறாக பேசினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு ஏனோ தானோவென்று அவதூறுகள் கூடாது என்பதற்காக அவதூறு தொடர்பான ஷரீஅத் குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

அவர் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் கற்பழிக்கப் பட்ட பெண் அங்கும் இங்கும் அலைந்து தானெ ஒரு புலன் விசாரனை செய்து, நான்கு சாட்சிகளை தேடி அவர்களுடன் கூட்டமாக சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணையே கல்லால் அடித்து கொல்லப்படுவாள் என்று கதை நீட்டி இருக்கிறார் நேசகுமார். அதானால்தான் இஸ்லாமிய நாடுகளில் புகார்கள் குறைவாக இருப்பதாகவும் காரணம் கண்டுபிடித்துள்ளார்.

நேசகுமார் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். அவரே வேறொரு கட்டுரையில் கீழ்க் கண்டவாறு அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே விவரிப்பதை பார்க்கலாம்.

இவரின் "இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும்" (x) என்ற கட்டுரையில், முகம்மது நபி போர்களத்திலிருந்து திரும்பி வரும்வழியில் தங்கியிருக்கும்போது. மல ஜலம் கழிப்பதற்காக கூடாரத்திற்க்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகம்மது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர். திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே, அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் என்றும் சஃவான் என்ற முஸ்லீம் ஆயிஷாவை அடையாளம் கண்டு முகம்மது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார். ஆனால் இந்த நிகழ்வின் தொடர்பாக ஆயிஷா அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது என்றும்


இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 "எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு கூறப்படுவது கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்வது சம்பந்தமான குற்றவியல் சட்டம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை கற்பழிப்புக்கான சட்டம் என்று தனக்குத் தொன்றியதை வைத்து விஷம் கக்குவது ஏன்?

இஸ்லாத்தை பற்றி ஆதாரத்துடன் விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லும் நேசகுமார் எடுத்துவைக்கும் ஆதாரமெல்லாம் இத்தகையதுதான்.

கற்பழிப்புக்கும், கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் எழுதுவதுதான் நேர்மையான விமர்சனமா?

இவர் சொன்ன
"தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை".
என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

அது மட்டுமல்லாமல். இவரின் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எனது விருப்பம். காரணம் அவர் ஆங்கில மொழிகளில் இஸ்லாத்தை எதிர்க்கும் யூத, கிருஸ்தவர்களால் எழுதிவைக்கப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய நுணுக்கமான அவதூறு விஷயங்களை தமிழில் எழுதுவதன் மூலம் இவைகளுக்கு பதில் அளிக்க என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் வழியாக குறைந்த பட்சம் ஓரளவாவது மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தின் மேல் உள்ள அவதூறுகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நேசகுமாரின ஆதாரத்திற்கு காத்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், உங்களின் பதில்களும் ஆதாரங்களும் தாங்கள் தெரிவித்த மேலே சொன்ன கேள்வியை ஒட்டியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

_____________________
x] http://www.thinnai.com/pl11110410.html

Monday, March 21, 2005

வாருங்கள் விவாதிக்கலாம்

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு "இறை ஆவேசம்" வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது? நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

விமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே அதற்கும் தயாராக இருந்துக் கொண்டு விமர்சனம் செய்யுங்கள். சேற்றை எடுத்து தெருக்களில் போவோர் வருவோர் மேல் எல்லாம் வீசிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் விமர்சனம் என்று பெயர் அல்ல. அப்படி செய்பவர்களுக்கு என்ன பெயர் என்று படிப்பவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

இப்படி ஏற்கனவே பல இடங்களில் நீங்கள் சேற்றை அள்ளி வீசியிருக்கிறீர்கள், அதில் ஒவ்வொன்றாக வருகிறேன். உங்களது காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் உங்களிடம் கேட்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் எனது 'நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று' தலைப்பில் கேட்ட கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் இல்லை. என்ன காரணம்? இது போன்ற விஷயங்களை எழுதும்போது ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதானே சிறந்தது, அல்லது எதை வேண்டுமானலும் எழுதலாம் என்று எழுதுகிறீர்களா? விவாதம் தேவையா என்றவுடன் வீரியம் கொண்டு எழுதும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு ஆதாரம் கொடுப்பதற்க்கு இத்தனை காலம் ஏன்? காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் விவாதங்கள் வரும்போது இதை சாவகாசமாக மறந்துவிடாலம் என்ற காரணத்தாலா? நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார்த்தைகளை கொட்டிவிட்டு அதை நியாயப்படுத்துவது என்பதைவிட யோசித்து செயல்படுவதே சிறந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அய்யா! இஸ்லாத்தின் உண்மையான முகத்தைப் பார்க்க பயம் என்று எழுதியிருக்கிறீர்கள், இன்னும் சகதியில் புழுத்துக் கிடக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இஸ்லாம் என்ற கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பார்க்க நீங்கள் பயப்படுகிறீர்கள். இஸ்லாம் என்ற உரை கல்லில் உங்களின் கொள்கைகளை உரசிப் பார்க்க பயம். இஸ்லாம் வெறும் இறை வணக்க முறைகளை மட்டும் உபதேசித்தால் உங்களுக்கு இந்த பயம் வராது. இஸ்லாம் வாழ்க்கை முறையையும் பேசுவதால்தான் உங்களுக்கு இந்த பயம். இதுநாள் வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை சரியா தவறா என்ற கேள்வியை கேட்க வைக்குமே என்ற பயம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உண்மையை உரசிப் பார்க்க பயம்.

இஸ்லாத்தைப் பற்றி நமக்கு நாமெ கற்பித்துக் கொண்ட அந்த உருவகங்கள் உடைந்துபோகும் என்று எழுதியிருக்கிறீர்கள். யாரய்யா அப்படி உங்களுக்கு நீங்களே உருவகங்களை கற்பித்துக் கொள்ளச் சொன்னது? எங்கிருந்து வந்தது அந்த அழகிய உருவகங்கள்? வாளாலும், வன்முறையாலும் வளர்ந்த மதம் என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் உங்களின் உள்ளங்களில் எப்படி இஸ்லாத்தைப் பற்றிய அழகிய உருவகங்கள் உருவானது?

விவாதங்கள் தேவைதான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி இருந்த்தால் தான் வளர்ச்சி இருக்கும். நானும் அபூ முஹை மட்டும் விவாதிக்கொண்டால் போதாது. நானும் நீங்களும் விவாதிக்க வேண்டும், ஒரு குப்புசாமியும் குத்புதீனும் விவாதிக்க வேண்டும். இந்திய ஆயுர்வேத மருத்துவத்தையும் இன்னும் சமஸ்கிருத காவியங்களையும் கி.பி. 1200 களில் சிரமப்பட்டு அரபியில் மொழியாக்கம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு அது சாத்தியமானது அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டதால்தான். யுனானி மருத்துவ முறையயும் சித்த வைத்திய முறையும் சங்கமித்தது அரேபிய மண்ணில்தான்.

நேசகுமாரின் விரிவான விவாதங்களுக்கு காத்திருப்பதோடு எனது முந்தைய கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று விடை பெறுகிறேன்.

Sunday, March 20, 2005

எது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்

நேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ அதே வேலையைத்தான் தற்போது நேசகுமார் என்பவரும் செய்து வருகிறார். எனவே, ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது எளிதாக இருக்கும்.

ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக

1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.

2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.

இவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

x] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.
x] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
x] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
x] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

இன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!

x] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

அடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.

x] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.

அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.

x] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).
x] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.

அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.

சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.

சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.

இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.

இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.

கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.

அறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

ஆதாரப்பூர்வமானவை
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.

உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.

1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ

2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ

1) -> அபூ அவானா -> குதைபா ->
2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->
ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.

1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்கலாம்.

இல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது நேசகுமார் போன்றவர்கள் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.

திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதிஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.

இந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும். இவைகளை இன்னும் சரிவர புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.

Thursday, March 03, 2005

நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று

நேசகுமாரின் "இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்" வலைப்பதிவிற்குள் சென்றபோது, எனக்கு முதலில் தென்பட்டது, வலைப்பதிவின் தலைப்பு "இஸ்லாம் முஸ்லீம் அல்லாதோர் பார்வையில்" என்று மாறியிருந்ததுதான். ஏன் இப்படி உள்ளொன்றும், புறமொன்றுமாக தலைப்பு இருக்கிறதென்று புரியவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதன் காரணத்தாலோ என்னவோ. அவரின் கருத்துக்களும், எழுத்து நடைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் எனக்கு காட்டுகின்றன.

ஒரு வேளை இது தொழில் நுட்பக் கோளாராகக் கூட இருக்கலாம். இந்த தொழில் நுட்பக் கோளாறு இயந்திரங்களுக்கும், வாகனங்களுக்கும் மேலும் கணினிகளுக்கும் மட்டும் ஏறபடக் கூடியதல்ல. மனிதர்களுக்கும் ஏற்படக் கூடியதுதான். இந்தக் கோளாறு, உடலின் அங்கங்களில் மட்டும் இருக்கும் போது, துன்பம் பாதிப்படைந்த அந்த மனிதனோடு மட்டும் நின்று விடுகிறது. ஆனால், மனிதனின் கட்டுப்பாட்டு தலைமையகமான மூளையிலும், அதைத் தொடர்ந்து வரும் சிந்தனையிலும் வரும் போது, அது பாதிக்கப்பட்ட மனிதனோடு நில்லாமல், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நேசகுமாரின் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது எந்த விதமான கோளாறு, பாதித்திருப்பது எங்கே என்று படிப்பவர்களுக்கு புரிந்துவிடும்.

பிரச்சனைக்கு வருவோம். நேசகுமார் தனது கட்டுரை ஒன்றில் "நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது" (1) என்ற அப்பட்டமான வரலாற்று பிதற்றல்களை எழுதியுள்ளார்.

இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் "நபிகளாரின் காலத்திலேயெ" என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.

பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

குறிப்பு:
1) நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள் - நேசகுமார் (திண்ணையில் வெளியான கட்டுரை 16/12/2004)

அறிமுகம்

அனைவருக்கும் சலாம்.

என் பெயர் அப்துல்லாஹ். கடவுள் அருளால் அனைவரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவல். நான் இணைய உலகத்துக்கு பழையவனும், விவாதத்திற்கு புதியவனுமாவேன். சினேகிதனால் அறிமுகப்படுத்துப்பட்ட தமிழ்மணத்துக்கு அவ்வப்போது தலை காட்டிச் செல்வதுண்டு.

"இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்று தனக்கு தோன்றியதெல்லாம் ஏதோ கண்டுபிடிப்புபோல் இஸ்லாத்தைப்பற்றியும் முகம்மது நபி பற்றியும் புதுசு புதுசா விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நேசகுமார்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வைப்பது அவரவர் உரிமை. ஆனால் பொதுவில் வந்து தப்பும் தவறுமாக திரிப்பதும் சவால் விடுவதும்தான் என்னை இங்கு எழுத தூண்டுகிறது. உண்மையை மற்றவர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன், தவிர நேசகுமாருக்காக அல்ல.

இங்கு வந்து, நேரத்தை செலவு செய்து படித்ததற்கு மிக்க நன்றி.